http://www.youtube.com/watch?v=Kjl7Up8hylg
பப்பாளிப்பழம்
பப்பாளிப்பழம் சத்துக்கள் நிறைந்த மருத்துவக்குணம் கொண்ட அனைவராலும் விரும்பி உண்ணப்படும் பழமாகும்.இதில் விற்றமின் A, C, E மற்றும் நார்ச்சத்துககள் அடங்கியுள்ளன.
பப்பாளியின் பயன்கள்
இரத்தத்தில் உள்ள அமிலத்தன்மை, இரத்தச்சோகை என்பவற்றைக் குணப்படுத்தும் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது.
தினசரி பப்பாப்பழத்தை உண்டுவந்தால் உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றப்பட்டு உடல் பொலிவுறும் உடலில் காயங்கள் ஏற்படும் போது அதிகளவான இரத்தம் வெளியேறுவதை தடுத்து குருதியை உறையச்செய்யும் நொதியங்கள் இப்பழத்தில் உள்ளன.
சிறுநீரகக்கல் உள்ளவர்களுக்குச் சிறந்தது மலச்சிக்கலை நீக்க வல்லது.
இப்பழத்தி்ல் உள்ள vitamin E குடல்பகுதியில் cancer ஏற்படுவதைத்தடுக்கும்.
நன்கு பழுத்த பழத்தை கூழாக்கி முகத்தில் பூசிவர முகம் பளபளப்படையும்.
அடிக்கடி பப்பாப்பழத்தை உண்டு வருபவர்களை எந்த தொற்றுநோயும் தாக்காது.
மூலநோய்,குடல்அழற்சிக்கு சிறந்தது.
பப்பாப்பழ விதையை அரைத்து பாலில் கலந்து குடித்தால் வயிற்றுப்புழு நீங்கும்.
பப்பாளி இலை புற்றுநோயை அழிக்கும் சக்திகொண்டது.
நரம்பு மண்டலத்திற்கு உரமேற்றும் தன்மையுடையது.
கர்ப்பிணிகளுக்கு பப்பாளிப்பழம் சிறந்ததா?
கர்ப்பம்தரித்து 8வாரங்களுக்கு பப்பாசி உட்கொள்வதைத் தவிர்க்கவேண்டும்.பப்பாளிப்பழத்தை உண்ணும்போது உடல் வெப்பநிலை அதிகரிக்கும்போது கருக்கலையும் வாய்ப்பு ஏற்படும்.
கரு உண்டாகுதல் பின்தள்ளிப்போகக்கூடும்.
1அல்லது 2 துண்டு்க்கு மேற்படாது உண்ணல் சிறந்தது.
தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )
தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே இல்லை.
மேலும் தண்ணீர் பல மருத்துவ குணங்களை தனகத்தே கொண்டுள்ளது. தண்ணீரில் இருக்கும் நற்குணமே நம் உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை தரும் ...
தண்ணீரை மருந்தாக ( வாட்டர் தெரஃபி )பயன்படுத்தும் முறை.
தினமும் காலையில் தூங்கி எழுந்தவுடன் வெறும் வயிற்றில், பல் கூட விளக்காமல் சுமார் 1.50 லிட்டர் தண்ணீர் அல்லது 6 டம்ளர் தண்ணீரை குடிக்க வேண்டும். முதலில் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும் ஆனால் போக போக சரியாகிவிடும்,
இந்த முறையை செய்யும் முன்பும், செய்த பின்பும் ஒரு மணி நேரத்திற்கு எதையும் குடிக்கவோ மற்றும் சாப்பிடவோ கூடாது. முன்தின இரவு எந்த வகையான போதை பொருல்களையும் பயன்படுத்தி இருக்க கூடாது
முதலில் 1.50 லிட்டர் தண்ணீர் அருந்த முடியாதவர்கள், கொஞ்சம் கொஞ்சமாக, அதே நேரத்தில் சிறிய இடைவெளி விட்டும் குடிக்கலாம்.
தண்ணீர் மருத்துவத்தின் ( வாட்டர் தெரஃபி ) சில நன்மைகள்;
இதை சரியாக நாம் பின்பற்றினால் 1,முகம் பொழிவுபெரும்
2, உடலில் கொழுப்புகள் நீங்கி உடலின் எடை குறையும் 3, உடல் புத்துணர்வு பெரும் 4, ஜீரணசக்தி அதிகரிக்கும்
5, நாள் முழுவதும் உடல் சுறுசுறுப்பாக இருக்கும் 6, இரத்த அழுத்தம் நோய் நீங்கும் 6, சர்க்கரை வியாதி சரியாகும் மேலும் பல நன்மைகள் இதில் உண்டு
தலைவலியை தடுக்க எளிய வழிமுறைகள் | ||
தலைவலி மிக சாதாரணமாக பலருக்கும் வரக்கூகூடிய ஒரு பிரச்சினை. சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பலருக்கும் எப்போதாவது ஒரு முறை தலைவலி வந்த அனுபவம் இருக்கும். பொறுக்க முடியாத வலி ஏற்படும் போது வேலையில் கவனம் செலுத்த முடியாமல் தினசரி பணிகளில் ஆர்வம் குறைந்து போகும் நிலை வரலாம். சிலருக்கு அடிக்கடி வரும் மைக்ரேன் எனப்படும் தலைவலி பலவித சிக்கல்களை கொண்டு வரக்கூடியது. சாதாரணமாக அதிக மன அழுத்தம், வேலை பளு இவற்றால் வரும் தலைவலி, க்ளஸ்டர் தலைவலி எனப்படும் தொடர் தலைவலி போன்றவை மற்ற உடல் நலக் குறைபாடுகளை எதிரொலிப்பது இல்லை.
ஆகவே கவலை படத்தேவையில்லை. ஆனால் சில சமயம் கண், மூக்கு, சுவாச கோளாறுகள், தலையில் உள்ள சைனஸ்களில் நீர் கோர்த்து இருப்பது, பல்வலி போன்றவையும் தலைவலியை கொண்டு வரக்கூடும்.
அதுமட்டும் இன்றி சில சமயம் தலையில் ஏற்பட்ட காயங்கள், அதிக ரத்த அழுத்தம், இதனால் ஏற்படும் சில பக்கவாதம் மூளைக்கு ரத்தம் எடுத்து செல்லும் தமனிகளில் ஏற்படக் கூடிய ரத்த அழுத்தம், மூளையில் ஏற்படக் கூடிய சீழ், மற்றும் மூளை காய்ச்சலின் ஆரம்ப அறிகுறி கூட தலைவலி ஏற்பட காரணம் ஆகலாம். 90 சதவிகித மக்களை எந்தப் பாகுபாடும் இல்லாமல் பாதிப்பதில் தலைவலி முக்கிய இடத்தைப் பெறுகிறது.
தலை வலிக்கென்று தனி மருத்துவமனைகள் உலகின் முக்கிய நகரங்களில் வர ஆரம்பித்து விட்டன. தலைவலிக்கு மட்டும் தனியாக டாக்டர்கள் வந்து விட்டார்கள். இவர்களில் சென்னை வடபழனி ஆகாஷ் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனையை சேர்ந்த டாக்டர் ஜி.கே.குமாரும் ஒருவர். அவர் தலைவலி சிகிச்சை முறைகள் பற்றி கூறியதாவது:-
பொது மக்களால் அலட்சியமாகக் கையாளப்படுகிற தலைவலியும் அதிகமாக இருக்கிறது. தலைவலியில் 2 வகை இருக்கிறது. முதல் வகையை பிரைமரி ஹெட்-ஏக் என்கிறார்கள். உடல்ரீதியாக ஒரு மாற்றம் ஏற்படும் போது தலையில் மூளையைச் சுற்றி உள்ள ரத்தக் குழாய்கள் விரிவடைந்து தளர்ந்து மூளையிலும் அதைச் சுற்றிலும் உள்ள நரம்புகளை அழுத்துகின்றன.
இந்த நேரத்தில் ஏற்படும் தலை வலியை பிரைமரி ஹெட்ஏக் என்கிறோம். மற்ற படி மூளையில் கட்டி, அடிபட்டிருந்தல், நோய்த் தொற்று இருத்தல் போன்ற காரணங்களால் ஏற்படுகிற தலைவலியை செகன்டரி ஹெட்ஏக் என்கிறோம். பொதுவாக முதல் வகை தலைவலிக்கு எந்த வகையான நேரடி காரணமும் இருக்காது.
பார்வையில் மாற்றம், குமட்டல், வாந்தி, மயக்கம் போன்ற ஏதோ ஒன்றோ இருக்குமானால் நீங்கள் கண்டிப்பாக உடனே ஒரு மருத்துவரைச் சந்திக்க வேண்டும். இது மூளைக் கட்டி, ரத்தக் கசிவு, நோய்த் தொற்று போன்ற ஏதோ ஒன்றோடு தொடர்பில் இருக்கலாம்.
வலி நிவாரண மாத்திரைகள்::
பரசிடமோல் இதற்கு நன்கு வலி நிவாரணமளிக்கும் மருந்தாகும். தலைவலி ஆரம்பித்த உடனேயே முழு அளவிலான மருந்தினை எடுத்துக் கொள்வது மிகவும் பயனளிக்கத் தக்கது. தலைவலி முற்றாகத் தீவிரமடையும் முன் இவ்வாறு மாத்திரைகளை உட்கொள்வதன் மூலம் முற்றான தலைவலி நிவாரணத்தைப் பெற முடியும்.
தேவை ஏற்படின் இரண்டாவது மாத்திரையை நான்கு மணி நேர இடைவெளியின் பின்னர் எடுத்துக் கொள்ள முடியும். பரசிடமோலுடன் கூட்டான மருந்துகளை தவிர்ப்பது உகந்தது. அழற்சிக்கெதிரான வலிநிவாரண மருந்துகள் இவை கூட பரசிடமோலுக்குப் பதிலாகப் பயன்படுத்த முடியும்.
வலிநிவாரண மாத்திரைகளை சில நாட்களுக்கு மேலாக தொடர்ச்சியாகப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அத்துடன் மாதம் ஒன்றில் 15 நாட்களுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது. தலைவலியினைத் தவிர்ப்பதற்காக எந்நேரமும் வலிநிவாரண மருந்துகளை உட்கொள்ளக் கூடாது. தலைவலி ஏற்படும் போது மட்டுமே உட்கொள்ள வேண்டும்.
கிச்சைமுறை: அடிப்படையாகச் சில மருந்துகளைப் பயன்படுத்துதல், டிடாக்சிபிகேஷன் முறைகள், போட்டுலினம் ஊசிகள் வழி நரம்புகளைத் தளர்த்துதல், டிரிகர் பாயிண்ட் இன்ஜக்ஷன்ஸ், ஆக்ஸ்பிடல் நெர்வ் ப்ளாக், மற்றும் தேவைப்படுகிறவர்களுக்கு பழக்க வழக்கப் பயிற்சிகள்.
உணவு முறைகள்:
சில சமயத்தில் நாம் சாப்பிடும் உணவுகள் கூட தலைவலியை உருவாக்கிவிடும். காபியில் இருக்கிற காபின், வெண்ணையில் இருக்கிற டைரமைன், வாழைப்பழம் போன்ற சில பழங்கள், சிட்ரஸ் இருக்கிற ஆரஞ்சு, லெமன் போன்ற சில வகை உணவுப் பொருட்களுக்கு தலைவலியைத் தூண்டுகிற சக்தி இருக்கிறது.
சாப்பிட முடியாமல் போவது, சாப்பிடும் நேரங்களில் மாற்றம் போன்ற சில பழக்கங்களும் தலைவலியைத் தூண்டும். உணவில் காய்கறி, பழங்கள், கீரையை அதிகம் சேர்க்க வேண்டும். தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
எம்.எஸ்.ஜி. இருக்கிற அஜினோமோட்டோ கூட ஒரு தலைவலி தூண்டல் இருக்கிற உணவுப் பொருள்தான். சரியான உணவு, நல்ல தூக்கம், மிதமான உடற்பயிற்சிகள், சில மனம், உடல் தளர்வடையச் செய்யும் பயிற்சிகள் போன்றவற்றை முறையாகச் செயல்படுத்தினால் தலைவலிகள் ஏற்படுவதை இயற்கையாகவே தவிர்க்கலாம்.
அடிக்கடி தலைவலியால் அவதிப்படுகிறவர்கள் ஒரு மருத்துவரின் உதவியோடு மாத்திரைகளை எடுத்துக் கொள்வது நலம். கடைகளில் நேரடியாக நீங்கள் வாங்குகிற வலி மாத்திரைகளால் அல்சர், கிட்னி பிரச்சினை போன்ற மிகப் பெரிய தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன.
தடுக்கும் முறைகள்:
மன அழுத்தத்தால் ஏற்படும் தலைவலியை குறைக்க மனதையும், உடலையும் தளர்த்துதல் அவசியம். ஓய்வு போன்றவை அழுத்தம் காரணமாக தலைவலியை தடுக்க உதவும்.
மூச்சுப் பயிற்சி, உடலைத் தளர்த்தும் பயிற்சிகள், பிரச்சினைகளை கையாளப் பழகும் உத்திகள் போன்றவை மன அழுத்தத்தின் போது பதட்டத்தினை குறைத்துக் கொள்ளவும் தலைவலியினைத் தவிர்க்கவும் உதவும். உடற்பயிற்சிகளில் ஈடுபடாதவர்களிடம் அழுத்தம் காரணமான தலைவலி கூடுதலாக காணப்படுகிறது.
இப்படிப்பட்டவர்கள் நடைபயிற்சி, ஓட்டம், சைக்கிளோட்டம், நீச்சல் போன்றவற்றில் ஈடுபடலாம். இவை தலைவலிக்கு மட்டுமின்றி உடல் ஆரோக்கியம் பேணவும் உதவும்.ஒற்றை தலைவலி::: தலைவலியில் பிரபலமான ஒற்றைத் தலைவலி தான் இந்த மைக்ரேன் தலைவலி, தாங்க முடியாத ஒருபுறத் தலைவலி ஏற்பட்டு குமட்டல், வாந்தி ஏற்படும். இந்த வகை தலைவலி 18 சதவீத பெண்களையும், 6 சதவீத ஆண்களையும் தாக்குகிறது.
டென்ஷன் தலைவலி::
டென்ஷனால் வருகிற தலைவலி தான் முதல் வகை தலைவலிகளில் பிரதானமானது.இப்படி டென்ஷனால் வருகிற தலைவலி 80 சதவீíதம் பேரை பாதிக்கிறது என்று வளர்ந்த நாடுகளில் எடுக்கப்பட்ட ஒரு சர்வே தெரிவிக்கிறது. மன அழுத்தம் அல்லது டென்ஷன் தலைவலியை உருவாக்குகிறது என்பதல்ல. இது ஒரு வசதிக்காகவே சொல்லப்படுகிறது.டென்ஷனால் ஏற்படுகிற தசை இறுக்கமே அந்த தலைவலிக்கு முக்கிய காரணம்.
கொத்து தலைவலி::
தலையில் ஒரு பக்கம் வலி ஏற்பட்டு அதே பகுதி கண்ணில் சிவப்பும், நீர்ச் செறிவும் நிறைந்து காணப்படும். கை, காலில் வெட்டு ஏற்பட்டால் ஏற்படும் வலியை விட இந்த வகையில் அதிக வலி இருக்கும். பெண்களை விட ஆண்களையே இந்தத் தலைவலி அதிகம் தாக்குகிறது. சிலர் இஷ்டத் திற்கும் மாத்திரைகள் பயன்படுத்துகிறார்கள்.இதனைக் குறைக்க முயலும் போது தலைவலி ஏற்படும் இந்த வகை தலைவலியில் இருந்து விடுபட நிச்சயம் ஒரு மருத்துவரின் உதவி தேவை. சர்க்கரை நோய், அதிக அளவு ரத்த அழுத்தம் போன்றவை கூட தலைவலிக்கு காரணமாக இருக்கலாம்.
மைக்ரே தலைவலி:
மைக்ரேன் வகை தலைவலி உடல்ரீதியான மாற்றங்களால் மட்டும் ஏற்படுகிறது என்பதற்கு நிறைய பரிசோதனை முடிவுகள் இருக்கின்றன. மைக்ரேன் தலைவலியின் போது மூளையில் பயலாஜிக்கல் மாற்றங்கள் நிகழ்கின்றன. புறக் காரணங்கள், அகக் காரணங்கள் இந்த மாற்றத்திற்கு ஒரு தூண்டுகோலாக இருக்கலாம். | ||
தலைவலியை தடுக்க எளிய வழிமுறைகள் |
உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள்
இந்த வழிமுறைகளை தொடர்ந்து ஒரு மாதம் பின்பற்றி பாருங்கள். உங்களின் எடை தானாக குறையும். ஒரு வாரத்திற்கு, அரை கிலோவிலிருந்து ஒரு கிலோ வரை எடை குறைந்தால், சரியான வழியில் எடையைக் குறைக்கிறீர்கள் என்று அர்த்தம்.1 ஒழுங்கான இடைவேளைகளில், குறைந்த அளவில் சாப்பிடுங்கள். ஒருபோதும் பட்டினி கிடக்காதீர்கள். முக்கியமாக, காலை உணவை தவிர்த்தால், அதிகப் பசியெடுத்து, அடுத்த வேளை உணவை ஒரு பிடி பிடிக்க நேரிடும்.
2 தினமும் நடைபயிற்சி செய்யுங்கள். இது உடல்பயிற்சியை விட சிறந்தது. நடைபயிற்சியும் யோகாவும் ஒன்று.
3 தின்பண்டங்களுக்கு பதிலாக தினமும் மூன்று வகை பழங்கள் சாப்பிடுங்கள். அதில் ஒன்று ஆரஞ்ச், சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் வகைப் பழமாக இருக்கட்டும்.4 அவரை, கொத்தவரை, பீன்ஸ், கேரட், முட்டைகோஸ், காலி ப்ளவர், முருங்கைக்காய், சௌ சௌ, பீர்க்கங்காய், புடலங்காய், சுரைக்காய், நூல்கோல், அத்திக்காய், பரங்கிக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ, பூசணிக்காய், வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளில் ஏதேனும் ஒன்றையாவது தினமும் உணவில் இரண்டு கப் (400 கிராம்) சேருங்கள். உருளை, சேனை போன்ற கிழங்கு வகைகளை தவிர்த்து விடுங்கள்.
5 வாரத்தில் மூன்று நாட்கள் கீரையும், தட்டாம்பயறு, பச்சைப்பயிறு, கறுப்பு சுண்டல் கடலை, கொள்ளுப்பயறு போன்ற பயறு வகைகளும் அவசியம் சேருங்கள். அதோடு, நார்ச்சத்துள்ள கைக்குத்தல் அரிசி, கைக்குத்தல் அவல், முழு கோதுமை, கோதுமை ரவை, கேழ்வரகு, கம்பு போன்ற தானியங்களையும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
6 அதிக கொழுப்பில்லாத பாலில் (அதாவது 3% அளவே கொழுப்பு சத்துள்ள ‘டோன்டு பாலில்) தயாரித்த காபி, டீ, தயிர் சாப்பிடுங்கள்.7 தினமும் இரண்டிலிருந்து மூன்று லிட்டர் வரை தண்ணீர் அருந்துங்கள்.
8 அசைவத்தில் மீன், தோல் நீக்கப்பட்ட சிக்கன், முட்டையின் வெள்ளைக் கரு ஆகியவற்றை வேகவைத்து சாப்பிடலாம். கிரேவி வேண்டாம்.
9 நல்லெண்ணெய், கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை ஒரு நாளைக்கு மூன்று டீஸ்பூன் உபயோகிக்கவும்.
கட்டாயம் தவிர்க்க வேண்டியவை:
இனிப்புகள், சர்க்கரை, எண்ணெயில் வறுத்த மற்றும் பொரித்த உணவுகள், மைதா கொண்டு தயாரிக்கப்படும் உணவுகள்(கேக், பப்ஸ், பரோட்டா, பிஸ்கெட்) , மக்காச்சோழ மாவு, வெண்ணெய், நெய், சீஸ், குளிர் பானங்கள்(கோக், பெப்ஸி) மற்றும் மில்க் ஷேக்குகள். அசைவத்தில் மட்டன், பீஃப், போர்க், முட்டையின் மஞ்சள் கரு.இந்த வழிமுறைகள் உடல் எடையைக் குறைக்க சொல்லப்பட்டாலும் சர்க்கரை நோயாளிகளுக்கும் மிக ஏற்றவை.
ஒரு நாளைக்கான உணவுப் பட்டியல்
நேரம் சாப்பிட வேண்டிய உணவு
காலை 6 மணி சர்க்கரை இல்லாத காபி (அ) டீ – 1டம்ளர் (200 மி.லி)
காலை 8 மணி இட்லி – 2 (அ) இடியாப்பம் – 2 (அ) எண்ணெய் இல்லாத தோசை – 1. தொட்டுக் கொள்ள சாம்பார் (அ) காய்கறி சட்னி (வேர்க்கடலை சட்னி, தேங்காய் சட்னி வேண்டாம்.) இவற்றுடன் ஏதாவது ஒரு பழம்.
முற்பகல் 11 மணி சர்க்கரை இல்லாத, அப்போது பிழியப்பட்ட எலுமிச்சை ஜூஸ் (அ) மோர் – 1 (அ) 2 டம்ளர்.
நண்பகல் 1 மணி அரை கப் சாதம், சாம்பார் (அ) பருப்புக் கூட்டு – அரை கப், பொரியல் – 1 கப், தயிர் பச்சடி – 1 கப், சுட்ட அப்பளம் -1. (வடகம், பொரித்த அப்பளம் வேண்டாம்.)
மாலை 4 மணி சர்க்கரை இல்லாத காபி (அ) டீ – 1 டம்ளர் (200 மி.லி)
மாலை 5.30 மணி ஏதாவது பழங்கள் இரண்டு
இரவு 8.00 மணி எண்ணெய் இல்லாத சப்பாத்தி – 2, பருப்பு (அ) பசலைக்கீரை (அ)
காய்கறிக் கலவை கூட்டு. இதனுடன் முளைக் கட்டிய பயறு – 1 கப் (அ) கேழ்வரகு தோசை – 1. சாம்பார், காய்கறி சாலட் – 1 கப், மோர் (அ) கோதுமை ரவை உப்புமா(காய்கறிக் கலவையுடன்) – ஒரு கப், ஏதேனும் ஒரு காய் தயிர் பச்சடி – 1 கப்.
படுக்கப்போகும்போது ஏதேனும் ஒரு பழம் (அ) சர்க்கரை இல்லாத பால் – 1 டம்ளர். இரவு உணவிற்கும், படுக்கப்போவதற்கும் குறைந்தபட்சம் இரண்டு மணி நேரமாவது இடைவெளி வேண்டும்.
ஞாபக மறதியிலிருந்து விடுபடுவதற்கு [ செவ்வாய்க்கிழமை, 08 நவம்பர் 2011, 10:00.26 மு.ப GMT ] பலரையும் பாதிக்கும் பிரச்னை ஞாபக மறதி. சரியான காரணத்தை கண்டறிந்து சரி செய்தால் மறதியில் இருந்து விடுபடலாம் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.
மறதி என்பது ஒரு நோய் அல்ல. இதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் ஒன்று நேரத்தை திட்டமிடாமை.
காலையில் தாமதமாக எழுவதன் மூலம் அனைத்து வேலைகளையும் டென்ஷனுடன் செய்வதால் மனம் நிம்மதியற்று போகிறது. இந்த சூழலில் சாதாரண விஷயங்கள் கூட எளிதில் மறந்து விடுகிறது. நேரத்தை திட்டமிடுவதன் மூலம் டென்ஷனில் இருந்து விடுபட முடியும்.
மனம் அமைதியாக இருக்கும் போது முக்கியமான விஷயங்களை திரும்பத் திரும்ப நினைவுக்குக் கொண்டு வந்து காலை நேரத்தை இனிமையாக்க மாற்றலாம். அப்படியே மறந்தாலும் ஒரு நிமிடம் நிதானித்து நினைவுக்கு கொண்டு வர முடியும்.
மறதிக்கு இன்னொரு முக்கிய காரணம் கவனச்சிதறல். இதனால் முக்கிய விஷயங்கள் நினைவில் பதியாமல் போகிறது. ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வேலைகளை செய்வது மற்றும் வேறு விஷயங்களில் கவனம் செலுத்துவது போன்ற பழக்கங்களை உடனடியாக கைவிட வேண்டும்.
இவர்கள் ஒரு சமயத்தில் ஒரே ஒரு வேலையில் முழு கவனம் வைப்பதன் மூலம் மறதியை தடுக்க முடியும். மறக்கும் பழக்கம் அடிக்கடி ஏற்பட்டால் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.
நினைவாற்றல் பிரச்னை மூன்று வகைப்படும். முதலாவது குறுகிய கால நினைவாற்றல். பயன்படுத்திய தொலைபேசி எண்ணை உடனடியாக மறந்து விடுதல் இந்த வகை. அடுத்த வகை அண்மைக் கால நினைவாற்றல்.
இதில் சில மணி நேரங்களுக்கு முன்னர் நடந்ததை நினைவுக்குக் கொண்டு வருவதில் சிரமம் ஏற்படும். சிறு வயதில் நடந்த விஷயங்களை மறந்து விடுவது நீண்ட கால நினைவாற்றல் குறைபாடு.
ஞாபக மறதிக்கு பல காரணங்கள் உள்ளன. மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவு மற்றும் தலையில் அடிபடுவதால் நினைவாற்றலை இழக்கும் நிலை ஏற்படுகிறது.
குடிப்பழக்கம், வலிப்பு, பார்வை குறைபாடு போன்ற பிரச்னை உள்ளவர்களுக்கும் நினைவாற்றல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. கர்ப்பிணிகளுக்கு குறுகிய கால, அண்மைக் கால நினைவாற்றலில் பாதிப்பு ஏற்படலாம்.
நினைவாற்றல் பிரச்னையை பொதுவாக அல்சைமர் நோய் என்று அழைக்கிறோம். முதலில் அண்மை கால நினைவுகளை படிப்படியாக இழக்கின்றனர்.
புதிய தகவல்களை கற்பது மற்றும் நினைவில் வைத்து கொள்வதிலும் பிரச்னை ஏற்படும். ஒன்றையே திரும்பத் திரும்பக் கூறுவது, பொருட்களை இடம்மாற்றி வைத்து விட்டு தேடுவது போன்ற குழப்பங்கள் காணப்படும்.
தனி மனித ஆளுமை, பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது, சமூக பழக்கங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதில் தாமதம் ஏற்படும். இதுபோன்ற காரணங்களால் பதற்றம், கடுப்பு, மனச்சோர்வு மற்றும் குழப்பம், அமைதியின்மை ஆகிய பிரச்னைகள் உண்டாகி நிம்மதியற்ற வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.
இது போன்ற ஆரம்ப அறிகுறிகள் தெரியும் போதே சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம். பாதுகாப்பு முறை: ஒரு குழந்தை லட்சக்கணக்கான மூளை செல்களுடன் பிறக்கிறது. மனிதனுக்கு வயதாகும்போது படிப்படியாக மூளை செல்களில் சில அழிகிறது. புதிதாக எதுவும் உருவாவதில்லை.
வயதாகும் போது மூளை செயல்பாட்டுக்கு தேவையான வேதிப் பொருட்கள் உடலில் சரியாக உற்பத்தி செய்யப்படுவதில்லை. இதனால்தான் வயதாகும் போது நினைவாற்றல் பிரச்னை உருவாகிறது.
சிறு வயதில் இருந்தே பதற்றமான வாழ்க்கை சூழலை மாற்றி நேரத்தை திட்டமிட குழந்தைகளை பழக்க வேண்டும். இதன் மூலம் தேவையற்ற டென்ஷனை தவிர்க்கலாம்.
சத்தான உணவு, உடற்பயிற்சி ஆகியவை மனநிலையை உற்சாகமாக வைத்துக் கொள்ள உதவும். இதன் மூலம் நினைவாற்றல் பிரச்னையை தவிர்க்கலாம். நேரத்தையும் வேலையையும் திட்டமிடுவதன் மூலம் மறதிக்கான வாய்ப்பை குறைக்கலாம்.
அடுத்ததாக நினைவாற்றலை அதிகரிக்க பயிற்சி அளிக்கலாம். புதிர் விளையாட்டு, வார்த்தை விளையாட்டு ஆகியவற்றில் ஈடுபடலாம். எப்போதும் பரபரப்பாக இருப்பதை விடுத்து மனதை அமைதியாக வைத்திருப்பது அவசியம்.
அந்த நேரங்களில் மறக்கும் விஷயங்களை திரும்பத் திரும்ப நினைவுக்கு கொண்டு வருவதன் மூலம் முக்கியமான விஷயங்களை மனதில் பதிய வைக்கலாம். செய்ய வேண்டிய வேலை மற்றும் மறக்கும் விஷயம் குறித்து தாளில் எழுதி வைத்து நினைவுக்கு கொண்டுவரலாம். முக்கியமாக, மறதிக்காக கவலைப்பட கூடாது. இதனாலும் பிரச்னை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
தண்ணீர் சிகிச்சை செய்வது எப்படி? | ||
1. தலைவலி 2. ரத்த அழுத்தம் 3. சோகை 4. கீல்வாதம் 5. பொதுவான பக்கவாதம் 6. ஊளைச்சதை 7. மூட்டுவலி 8. காதில் இரைச்சல் 9. இருதயத் துடிப்பு 10. மயக்கம் 11. இருமல் 12. ஆஸ்துமா 13. சளி 14. காச நோய் 15. மூளைக் காய்ச்சல் 16. க ல்லீரல் நோய்கள் 17. சிறு நீரகக் குழாய் 18. பித்தக் கோளாறுகள் 19. வயிற்றுப் பொருமல் 20. ரத்தக்கடுப்பு 21. மூலம் 22. மலச்சிக்கல் 23. உதிரப் போக்கு 24. நீரழிவு 25. கண் நோய்கள் 26. கண் சிவப்பு 27. ஒழுங்கற்ற மாதவிடாய் 28. வெள்ளை 29. கருப்பை புற்று நோய் 30. மார்புப் புற்றுநோய் 31. தொண்டை சம்பந்தமான நோய்கள் நம்ப முடியவில்லையா? மீண்டும் சந்தேகம் கலந்த ஆச்சரியம் மேலிடுகிறது அல்லவா? ஜப்பான் பல துறைகளில் முன்னோடியாக இருந்து வருவது எல்லோரும் அறிந்த செய்தியே. அங்குதான் இந்த ஆராய்ச்சியின் முடிவு வெளிப்படுத்தப்பட்டு உள்ளது. ஜப்பானில் உள்ள நோயாளிகள் சங்கம்தான் இதை வெளியிட்டிருக்கிறது.
சரியான முறையில் சாதாரண குடிநீரைக் குடிப்பதால் அது மனித உடலைச் சுத்தம் செய் கிறது. அது உடலை வலு வாக்குகிறது. மருத் துவத் தொழிலில் ஹெமடோ பைசீஸ்’’ என்று சொல் லப்படும் முறைப்படி அது புது ரத்தத்தை உற்பத்தி செய்வதன் மூலம் குடல் பகுதி முழு வதையும் வலுவடையச் செய்கிறது. இந்த முறையின் மூலம் குடலின் பகுதியிலுள்ள திசு மடிப்புகள் தூண்டப்படுகின்றன என்னும் உண்மை சர்ச்சைக்கு அப்பாற்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ள ஒன்று. குடல் பகுதியிலுள்ள இந்தத் திசு மடிப்புகளால் சாப்பிட்ட அன்ன ரசத்தின் சாரமானது உறிஞ்சப்படும்போது புது ரத்தம் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது எவ்வாறு உண்மையோ அதேபோல் இதுவும் நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.
குடல் சுத்தமாக வைக்கப்படும்போது தினந்தோறும் பல தடவை சாப்பிடும் ஆகார வகைகளின் காரமானது இந்தத் திசு மடிப்புகளால் உறிஞ்சப்பட்டு அது புது ரத்தமாக மாற்றப்படுகிறது. இப்புது ரத்தமானது நோய்களைக் குணப்படுத்தி மீண்டும் புது ஆரோக்கிய நிலையைக் கொடுக்கும் வேலையைச் செய்வதில் அதிமுக்கியமானது.அதற்காகத்தான் தண்ணீரை முறையாக அ ருந்துவது அவசியம் ஆகிறது.
தண்ணீர் சிகிச்சை செய்வது எப்படி?
காலையில் எழுந்தவுடன் பல் துலக் குவதற்கு முன்பாகவே 1.26 லிட்டர் தண்ணீரை ஒரே தடவையில் குடித்துவிட வேண்டும். 1.26 லிட்டர் அளவுள்ள குவளையை வைத்துக் கொள்வது சாலச் சிறந்தது. தண்ணீரைக் குடித்த பிறகு ஒரு மணி நேரம் காப்பி, தேநீர் வேறு எவ்வித பானங்களையோ சாப்பிடக் கூடாது. இது மிக முக்கியமானது. காலையில் தண்ணீர் குடிப்பதற்குத் தயாராகும் வகையில் முதல் நாள் இரவு, சாப்பிட்டு முடித்த பிறகு படுக்கைக்குச் செல்லும் முன்பு நரம்பு மண்டலத்தை தூண் டிவிடக் கூடிய பானங்களையோ தின்பண்டங்களையோ சாப்பிடக் கூடாது. இந்த நிபந்தனை மிகவும் முக்கியமானது. இரவிலேயே பல்துலக்கிக் கொள்வது நல்லது.
நடக்க முடியாத அளவு பலவீனமாகப் படுக்கையில் உள்ளவர்கள் சுவாசத்தை வேகமாக வயிற்றுப் பகுதியின் மூலம் சில தடவை இழுத்துவிட்டு எஞ்சியுள்ள தண்ணீரைக் குடித்துவிடலாம். இம் மாதிரி குடித்த தண்ணீர் குடற்பகுதிக்குச் சென்று மு ன்னர் விளக்கியுள்ளபடி பழைய ரத்தத்தைச் சுத்தம் செய்து, புதிய ரத்தத்தை உற்பத்தி செய்ய உதவி செய்கின்றது. தொடக்கத் தில் இரண்டு மூன்று தடவை சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். பிறகு இயல்பு நிலைக்கு வந்துவிடும்.
சோதனைகள் மூலமாகவும், அனுபவ பூர்வமாகவும் பின்வரும் நோய்கள் குறிப்பிட்டுள்ள காலத்தில் குணமாக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மலச்சிக்கல் 1 நாள்; வயிற்றில் பித்தம் மற்றும் வாயு பொருமல் 2 நாட்கள்; சர்க்கரை வியாதி - 7 நாட் கள்; ரத்த அழுத்தம் வாரங்கள். புற்று - 4 வாரங்கள், காச கல்லீரல் நோய் - 3 மாதங்கள்.
முக்கிய குறிப்பு
மூட்டு வாதம், வாயுப் பிடிப்பு முதலிய நோய் உள்ளவர்கள் ஒரு வாரத்திற்கு தினந்தோறும் மூன்று தடவை காலை மற்றும் மதிய உணவிற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு இந்தத் தண்ணீர் சிகிச்சையைச் செய்து வர வேண்டும். ஒரு வாரங்கழித்து தினமும் காலையில் மட்டும் செய்து வந்தால் போதுமானது. சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து, பிறகுதான் தண்ணீர் அருந்த வேண்டும்.
படுக்கைக்குச் செல் லும் முன்பு காபி, தேநீர், போன்ற பானங்களையோ வேறு எவ்வித நொறுக்குத் தீனிகளையோ சாப்பிடக் கூடாது. |
பித்தம், வாதம், கபம் நீக்கும் வேப்பம் பூக்கள்-காது வலிக்கும் அரு மருந்து!
கண்ணுக்கு எதிரே கைக்கு எட்டிய தூரத்தில் கிடைக்கும் மூலிகை வேம்பு. காற்று மண்டலத்தை சுத்தம் செய்து நம் நோய்களைத் தீர்க்கும் கற்பக மரம். வேப்பமரத்தின் இலைகளும், பூக்களும், கனிகளும் மருத்துவகுணம் மிக்கவையே. வேப்பம்பட்டை, நீரிழிவுக்கு சிறந்த மருந்து. உடம்பில் ஏற்படும் சன்னி கண்ட நோய்களுக்கு வேப்ப எண்ணெயில் சிறிது கற்பூரம் சேர்த்து சூடாக்கி தலை உச்சியில் தேய்க்க சன்னி தீரும். அம்மை கண்டவர்களைச் சுற்றி வேப்பிலை கொத்துகளை போட்டு வைத்தால் இலைகளின் வாசனையால் நோயின் வேகம் தணியும். கிருமியும் அண்டாது.
தென்னிந்திய சமையலில் வேப்பம்பூக்களுக்கு முக்கிய பங்குண்டு. தமிழ்நாட்டில் சித்திரை வருடப்பிறப்பன்றும், ஆந்திரா, கர்நாடகாவில் யுகாதி அன்றும் வேப்பம்பூவை ரசம் வைத்தும், பச்சடியாகவும் உட்கொள்கின்றனர். மலர்கள் கடுமையான வயிற்று வலியையும் போக்கும் குணம் கொண்டவை.
மூன்று நோய்களுக்கு மருந்து
பித்தம், வாதம், கபம் ஆகிய மூன்று நோய்களையும் சமன்படுத்த வேப்பம்பூ பயன்படுகிறது. ஒரு கைப்பிடியளவு வேப்பம்பூவை எடுத்து உலர்த்தி பொடி செய்து கால் டம்ளர் நீரில் சிறிது தூளைக் கலந்து சாப்பிட்டு வந்தால் பித்தம், வாதம், கபம் சமனப்படும்.
வேப்பம்பூவை நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு வற்றல்குழம்பு, மிளகுரசம் தயார் செய்யும்போது சிறிது வேப்பம்பூவைச் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர வயிறு உப்பிசம்,பித்தம், வாதம் தொடர்புடைய நோய்கள் நீங்கும். கல்லீசரல் பாதுகாக்கப்படும்.
வேப்பம்பூ பொடியில் தேன் கலந்து தினம் 2 வேளை வீதம் மூன்று நாட்கள் உட்கொண்டு வந்தால் பித்தம் காரணமாக எற்படும் வாய்க்கசப்பு, வாந்தி, மயக்கம், போன்ற தொல்லைகள் நீங்கும். உலர்ந்த வேப்பம்பூவை கறிவேப்பிலையோடு துவையலாக்கி சாப்பிட, பித்தம் தொடர்பான சகல பிணிகளும் நிவர்த்தியாகும்.
உடல் பருமன் குறையும்
வேப்பம்பூவை தண்ணீரில் ஊறவைத்து அதனை குடித்து வர உடல் பருமன் குறையும். இது அல்சரையும் குணமாக்கும். உடலை வலுவாக்குவதில் வேப்பம்பூக்களின் பங்கு முக்கியமானது. தினம் இருவேளை வேப்பம்பூ பொடியை சாப்பிட முறைக்காய்ச்சல் நீங்கும்.
வேப்பம் பூவை வாட்டி தலையில் கட்டி வைத்தால் தலையில் உள்ள பேன், ஈறு, பொடுகு முதலியவை தீரும். இதை தலையின் உச்சியில் வைத்துக் கட்டினால் தலைபாரம் நீங்கி சுகமாக இருப்பதோடு கூந்தலும் செழித்து வளரும்.
சருமநோய்கள் நீங்கும்
வேப்பம்பூவைக் காய்ச்சி, இந்த கஷாயத்துடன் நெல்லிக்காய் சாற்றையும், தேனையும் கலந்து உட்கொண்டால் சரும நோய்கள் நீங்கும். வேப்பம் பூவையும், எள்ளையும் அரைத்துக் கட்டினால் கொடிய கட்டிகளும் உடனே உடைந்துவிடும். வேப்பம்பூ கஷாயத்தை சிறிதளவு காலையிலும், மாலையிலும் குடிக்கச் செய்தால் குழந்தைகளின் வயிற்றுக் கோளாறுகள் அகன்று வயிறு சுத்தப்படும்.
காதுகோளாறுகளுக்கு மருந்து
வேப்பம்பூவை பறித்து வந்து அதை கொதிக்கும் நீரில் போட்டு அதிலிருந்து வரும் ஆவியை காது வலியாக உட்செல்லும்படி தலையை வைத்திருந்தால் காதுவலி, காது இரைச்சல், சீழ் வடிதல், யாவும் நீங்கி காது நன்கு கேட்கும்.
எனவே இனிமேல் வேப்ப மரத்தைப் பார்த்தால் பேய் இருக்குமோன்னு பயப்படாதீங்க, அது ஒரு அருமையான டாக்டர் என்பதை புரிந்து கொண்டு, கொண்டாடுங்கள்.
மிகையான பசி, அசதி, நடப்பதில் சிரமம், அதிர்ச்சி, உடல் நடுக்கம் சோர்ந்து வியர்த்தல், படபடப்பு, வெளிறிய முகம் ஆகியவை ஏற்படும் நோய் முற்றினால் திடீர் மரணம் ஏற்படலாம்.
இரத்த சர்க்கரையைக் குறைக்கும் ஒரே ஹார்மோனாக இன்சுலின் சுரப்பது குறைந்தால் இர்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகி நீ¡¢ழிவு நோய் உண்டாகும். அதிக சிறுநீர் கழியும். சமநிலையில் மூச்சுவிட முடியாது. இருமல் வரும். மயக்கம் ஏற்பட்டு மரணமும் சம்பவிக்கும்.
பிட்யூட்டா¢ சுரப்பி (Pituitary gland)
மூளையின் அடிப்பாகத்தில் சிறிய பட்டாணி போன்று மூளையோடு ஒரு கம்பினால் இணைக்கப்பட்ட சுரப்பி இது வேலை குருத்தெலும்புகளின் வளர்ச்சியை அதிகா¢க்கிறது. திசுக்களின் மீதான வளர்ச்சியை அதிகா¢க்கிறது. தாய்மார்களின் பால்சுரப்பை அதிகா¢க்கிறது. புரத உற்பத்தியை அதிகா¢க்கிறது. இன்சுலின் என்னும் ஹார்மோனின் உற்பத்தியை அதிகா¢க்கத் தூண்டுகிறது. நினைவாற்றல், சிந்தனா சக்தியைத் தூண்டும் விந்து அணுக்களின் வளர்ச்சியைத் தூண்டுகிறது. பால் உணர்வு கேந்திரங்களைக் கட்டுப்படுத்துகிறது. இனப்பெருக்கம் சம்பந்தமான ஹார்மோன்களைச் சுரக்கும் சுரப்பிகளின் வளர்ச்சியைத் தூண்டுகிறது.
பிட்யூட்டா¢ சுரப்பு அதிகமானால் ஏற்படும் கேடுகள்
ராட்சத வளர்ச்சி, எலும்புகள் நீண்டு வளர்த்தல், தசை, உள் உறுப்புகள் பொ¢தாதல் போன்ற அறிகுறிகள் தோன்றும், கை கால்கள் பெருத்து இருக்கும். இரத்த சர்க்கரையின் அளவு கூடும். இதயம், கல்லீரல், நுரையீரல், மண்ணீரல் பொ¢தாகும். அதிகமாக வியர்க்கும். தைராய்டு சுரப்பியில் அட்¡¢னலின் வெளிப்பகுதியும் பொ¢தாகும். இரத்த அழுத்தம், மட்டுத்தன்மை, பெண்கள் மாதவிடாய் நோய்கள் உண்டாகும், ஆண்கள் விந்து சுரப்பி சுருங்கி ஆண்மையின்மை ஏற்படும்.
தைராய்டு சுரப்பி
தைராய்டு சுரப்பியானது தொண்டையின் அடிப்புறத்தில் அமைந்திருக்கிறது. மிக அதிகமான இரத்த ஓட்டமுடைய இச்சுரப்பி தைராக்ஸின் என்னும் ஹார்மோனைச் சுரக்கிறது. இது முக்கிய நரம்புகளால் கட்டப்படுத்தப்படுகிறது.
தைராக்ஸின் பணிகள்
சக்தி உற்பத்தியை அதிகா¢ப்பதோடு, உட்கொள்ளும் வாயுவின் அளவையும் அதிகா¢க்கிறது. கல்லீரல், இதயத்தில் உள்ள கிளைக்கோஜினை இடப் பெயர்ச்சி செய்கிறது. சிறுநீரகத்திலிருந்து நைட்டிரஜனை அதிகமாக வெளியேற்ற உதவுகிறது. உடல் வளர்ச்சியில் முக்கிய பங்குவகிக்கிறது. இதயத்துடிப்பிற்கு உதவுகிறது. வைட்டமின் A தயா¡¢ப்பில் உதவுகிறது. எலும்பு வளர்ச்சி, தசை வளர்ச்சி, பால் உறுப்புகளின் வளர்ச்சி, மன வளர்ச்சி, மைய நரம்பு மண்டல வளர்ச்சியிலும் பெரும் பங்கு எடுத்துக் கொள்கிறது.
தைராக்ஸின் குறைவால் ஏற்படும் கேடுகள்.
குழந்தைகளின் வளர்ச்சி தடைப்படும் எலும்பு வளர்ச்சி தடைப்படும். தோலில் சுருக்கம் ஏற்படும். பால் உணர்வு தடைப்படும். முகம் ஒளி இழந்து வாயில் கோழை வடியும். சிந்திக்கும் திறன் குறையும் பசியின்மை, மலச்சிக்கல் ஏற்படும். கன்னம் கனத்து சோகை மாதி¡¢ காணப்படும். சிறுநீ¡¢ல் நைட்டிரஜன் அளவு குறையும். உடலில் வெப்ப நிலை கூடும்.
பேரா-தைராய்டு சுரப்பி
பேரா-தைராய்டு சுரப்பி நான்கு சிறிய பகுதிகளைக் கொண்டது. தைராய்டு சுரப்பியின் பின்பகுதியில் ஒட்டிக் கொண்டிருக்கும். பேரா தார்மோன் என்னும் ஹார்மோனைச் சுரக்கிறது. இரத்தக் கால்சியத்தைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன் இது.
இது நிறைய கால்சியத்தைத் திரும்ப கிரகிக்க சிறுநீரகங்களை ஊக்குவிக்கிறது. எலும்பிலுள்ள கால்சியத்தை இரத்தத்திற்கு இடப் பெயர்ச்சி செய்கிறது.
பேரா தார்மோன் குறைவினால் ஏற்படும் கேடுகள்
சிறுநீ¡¢ல் கால்சியம், பாஸ்பரஸின் அளவு குறையும். சுவாசம் வேகமாகவும் சத்தத்தோடும் இருக்கும். இதயத் துடிப்பு அதிகா¢க்கும் உடலின் வெப்ப நிலை உச்ச நிலை அடையும் தசைகளில் இழுப்பு ஏற்படும். சுவாசத்திற்கான தசைகள் சுருங்கி விடுவதால் மரணம் ஏற்படும்.
பேரா-தார்¦மோன் அதிகம் சுரப்பதால் பலவீனம், தசைகளின் இயக்கம் குறைதல், வாந்தி, மனக்கோளாறுகள் ஏற்படுவதுடன் மற்றும் சிறுநீர் அதிகமாகக் கழியும்.
தலைவலியை தடுக்க எளிய வழிமுறைகள் | ||
தலைவலி மிக சாதாரணமாக பலருக்கும் வரக்கூகூடிய ஒரு பிரச்சினை. சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பலருக்கும் எப்போதாவது ஒரு முறை தலைவலி வந்த அனுபவம் இருக்கும். பொறுக்க முடியாத வலி ஏற்படும் போது வேலையில் கவனம் செலுத்த முடியாமல் தினசரி பணிகளில் ஆர்வம் குறைந்து போகும் நிலை வரலாம். சிலருக்கு அடிக்கடி வரும் மைக்ரேன் எனப்படும் தலைவலி பலவித சிக்கல்களை கொண்டு வரக்கூடியது. சாதாரணமாக அதிக மன அழுத்தம், வேலை பளு இவற்றால் வரும் தலைவலி, க்ளஸ்டர் தலைவலி எனப்படும் தொடர் தலைவலி போன்றவை மற்ற உடல் நலக் குறைபாடுகளை எதிரொலிப்பது இல்லை.
ஆகவே கவலை படத்தேவையில்லை. ஆனால் சில சமயம் கண், மூக்கு, சுவாச கோளாறுகள், தலையில் உள்ள சைனஸ்களில் நீர் கோர்த்து இருப்பது, பல்வலி போன்றவையும் தலைவலியை கொண்டு வரக்கூடும்.
அதுமட்டும் இன்றி சில சமயம் தலையில் ஏற்பட்ட காயங்கள், அதிக ரத்த அழுத்தம், இதனால் ஏற்படும் சில பக்கவாதம் மூளைக்கு ரத்தம் எடுத்து செல்லும் தமனிகளில் ஏற்படக் கூடிய ரத்த அழுத்தம், மூளையில் ஏற்படக் கூடிய சீழ், மற்றும் மூளை காய்ச்சலின் ஆரம்ப அறிகுறி கூட தலைவலி ஏற்பட காரணம் ஆகலாம். 90 சதவிகித மக்களை எந்தப் பாகுபாடும் இல்லாமல் பாதிப்பதில் தலைவலி முக்கிய இடத்தைப் பெறுகிறது.
தலை வலிக்கென்று தனி மருத்துவமனைகள் உலகின் முக்கிய நகரங்களில் வர ஆரம்பித்து விட்டன. தலைவலிக்கு மட்டும் தனியாக டாக்டர்கள் வந்து விட்டார்கள். இவர்களில் சென்னை வடபழனி ஆகாஷ் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனையை சேர்ந்த டாக்டர் ஜி.கே.குமாரும் ஒருவர். அவர் தலைவலி சிகிச்சை முறைகள் பற்றி கூறியதாவது:-
பொது மக்களால் அலட்சியமாகக் கையாளப்படுகிற தலைவலியும் அதிகமாக இருக்கிறது. தலைவலியில் 2 வகை இருக்கிறது. முதல் வகையை பிரைமரி ஹெட்-ஏக் என்கிறார்கள். உடல்ரீதியாக ஒரு மாற்றம் ஏற்படும் போது தலையில் மூளையைச் சுற்றி உள்ள ரத்தக் குழாய்கள் விரிவடைந்து தளர்ந்து மூளையிலும் அதைச் சுற்றிலும் உள்ள நரம்புகளை அழுத்துகின்றன.
இந்த நேரத்தில் ஏற்படும் தலை வலியை பிரைமரி ஹெட்ஏக் என்கிறோம். மற்ற படி மூளையில் கட்டி, அடிபட்டிருந்தல், நோய்த் தொற்று இருத்தல் போன்ற காரணங்களால் ஏற்படுகிற தலைவலியை செகன்டரி ஹெட்ஏக் என்கிறோம். பொதுவாக முதல் வகை தலைவலிக்கு எந்த வகையான நேரடி காரணமும் இருக்காது.
பார்வையில் மாற்றம், குமட்டல், வாந்தி, மயக்கம் போன்ற ஏதோ ஒன்றோ இருக்குமானால் நீங்கள் கண்டிப்பாக உடனே ஒரு மருத்துவரைச் சந்திக்க வேண்டும். இது மூளைக் கட்டி, ரத்தக் கசிவு, நோய்த் தொற்று போன்ற ஏதோ ஒன்றோடு தொடர்பில் இருக்கலாம்.
வலி நிவாரண மாத்திரைகள்::
பரசிடமோல் இதற்கு நன்கு வலி நிவாரணமளிக்கும் மருந்தாகும். தலைவலி ஆரம்பித்த உடனேயே முழு அளவிலான மருந்தினை எடுத்துக் கொள்வது மிகவும் பயனளிக்கத் தக்கது. தலைவலி முற்றாகத் தீவிரமடையும் முன் இவ்வாறு மாத்திரைகளை உட்கொள்வதன் மூலம் முற்றான தலைவலி நிவாரணத்தைப் பெற முடியும்.
தேவை ஏற்படின் இரண்டாவது மாத்திரையை நான்கு மணி நேர இடைவெளியின் பின்னர் எடுத்துக் கொள்ள முடியும். பரசிடமோலுடன் கூட்டான மருந்துகளை தவிர்ப்பது உகந்தது. அழற்சிக்கெதிரான வலிநிவாரண மருந்துகள் இவை கூட பரசிடமோலுக்குப் பதிலாகப் பயன்படுத்த முடியும்.
வலிநிவாரண மாத்திரைகளை சில நாட்களுக்கு மேலாக தொடர்ச்சியாகப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அத்துடன் மாதம் ஒன்றில் 15 நாட்களுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது. தலைவலியினைத் தவிர்ப்பதற்காக எந்நேரமும் வலிநிவாரண மருந்துகளை உட்கொள்ளக் கூடாது. தலைவலி ஏற்படும் போது மட்டுமே உட்கொள்ள வேண்டும்.
கிச்சைமுறை: அடிப்படையாகச் சில மருந்துகளைப் பயன்படுத்துதல், டிடாக்சிபிகேஷன் முறைகள், போட்டுலினம் ஊசிகள் வழி நரம்புகளைத் தளர்த்துதல், டிரிகர் பாயிண்ட் இன்ஜக்ஷன்ஸ், ஆக்ஸ்பிடல் நெர்வ் ப்ளாக், மற்றும் தேவைப்படுகிறவர்களுக்கு பழக்க வழக்கப் பயிற்சிகள்.
உணவு முறைகள்:
சில சமயத்தில் நாம் சாப்பிடும் உணவுகள் கூட தலைவலியை உருவாக்கிவிடும். காபியில் இருக்கிற காபின், வெண்ணையில் இருக்கிற டைரமைன், வாழைப்பழம் போன்ற சில பழங்கள், சிட்ரஸ் இருக்கிற ஆரஞ்சு, லெமன் போன்ற சில வகை உணவுப் பொருட்களுக்கு தலைவலியைத் தூண்டுகிற சக்தி இருக்கிறது.
சாப்பிட முடியாமல் போவது, சாப்பிடும் நேரங்களில் மாற்றம் போன்ற சில பழக்கங்களும் தலைவலியைத் தூண்டும். உணவில் காய்கறி, பழங்கள், கீரையை அதிகம் சேர்க்க வேண்டும். தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
எம்.எஸ்.ஜி. இருக்கிற அஜினோமோட்டோ கூட ஒரு தலைவலி தூண்டல் இருக்கிற உணவுப் பொருள்தான். சரியான உணவு, நல்ல தூக்கம், மிதமான உடற்பயிற்சிகள், சில மனம், உடல் தளர்வடையச் செய்யும் பயிற்சிகள் போன்றவற்றை முறையாகச் செயல்படுத்தினால் தலைவலிகள் ஏற்படுவதை இயற்கையாகவே தவிர்க்கலாம்.
அடிக்கடி தலைவலியால் அவதிப்படுகிறவர்கள் ஒரு மருத்துவரின் உதவியோடு மாத்திரைகளை எடுத்துக் கொள்வது நலம். கடைகளில் நேரடியாக நீங்கள் வாங்குகிற வலி மாத்திரைகளால் அல்சர், கிட்னி பிரச்சினை போன்ற மிகப் பெரிய தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன.
தடுக்கும் முறைகள்:
மன அழுத்தத்தால் ஏற்படும் தலைவலியை குறைக்க மனதையும், உடலையும் தளர்த்துதல் அவசியம். ஓய்வு போன்றவை அழுத்தம் காரணமாக தலைவலியை தடுக்க உதவும்.
மூச்சுப் பயிற்சி, உடலைத் தளர்த்தும் பயிற்சிகள், பிரச்சினைகளை கையாளப் பழகும் உத்திகள் போன்றவை மன அழுத்தத்தின் போது பதட்டத்தினை குறைத்துக் கொள்ளவும் தலைவலியினைத் தவிர்க்கவும் உதவும். உடற்பயிற்சிகளில் ஈடுபடாதவர்களிடம் அழுத்தம் காரணமான தலைவலி கூடுதலாக காணப்படுகிறது.
இப்படிப்பட்டவர்கள் நடைபயிற்சி, ஓட்டம், சைக்கிளோட்டம், நீச்சல் போன்றவற்றில் ஈடுபடலாம். இவை தலைவலிக்கு மட்டுமின்றி உடல் ஆரோக்கியம் பேணவும் உதவும்.ஒற்றை தலைவலி::: தலைவலியில் பிரபலமான ஒற்றைத் தலைவலி தான் இந்த மைக்ரேன் தலைவலி, தாங்க முடியாத ஒருபுறத் தலைவலி ஏற்பட்டு குமட்டல், வாந்தி ஏற்படும். இந்த வகை தலைவலி 18 சதவீத பெண்களையும், 6 சதவீத ஆண்களையும் தாக்குகிறது.
டென்ஷன் தலைவலி::
டென்ஷனால் வருகிற தலைவலி தான் முதல் வகை தலைவலிகளில் பிரதானமானது.இப்படி டென்ஷனால் வருகிற தலைவலி 80 சதவீíதம் பேரை பாதிக்கிறது என்று வளர்ந்த நாடுகளில் எடுக்கப்பட்ட ஒரு சர்வே தெரிவிக்கிறது. மன அழுத்தம் அல்லது டென்ஷன் தலைவலியை உருவாக்குகிறது என்பதல்ல. இது ஒரு வசதிக்காகவே சொல்லப்படுகிறது.டென்ஷனால் ஏற்படுகிற தசை இறுக்கமே அந்த தலைவலிக்கு முக்கிய காரணம்.
கொத்து தலைவலி::
தலையில் ஒரு பக்கம் வலி ஏற்பட்டு அதே பகுதி கண்ணில் சிவப்பும், நீர்ச் செறிவும் நிறைந்து காணப்படும். கை, காலில் வெட்டு ஏற்பட்டால் ஏற்படும் வலியை விட இந்த வகையில் அதிக வலி இருக்கும். பெண்களை விட ஆண்களையே இந்தத் தலைவலி அதிகம் தாக்குகிறது. சிலர் இஷ்டத் திற்கும் மாத்திரைகள் பயன்படுத்துகிறார்கள்.இதனைக் குறைக்க முயலும் போது தலைவலி ஏற்படும் இந்த வகை தலைவலியில் இருந்து விடுபட நிச்சயம் ஒரு மருத்துவரின் உதவி தேவை. சர்க்கரை நோய், அதிக அளவு ரத்த அழுத்தம் போன்றவை கூட தலைவலிக்கு காரணமாக இருக்கலாம்.
மைக்ரே தலைவலி:
மைக்ரேன் வகை தலைவலி உடல்ரீதியான மாற்றங்களால் மட்டும் ஏற்படுகிறது என்பதற்கு நிறைய பரிசோதனை முடிவுகள் இருக்கின்றன. மைக்ரேன் தலைவலியின் போது மூளையில் பயலாஜிக்கல் மாற்றங்கள் நிகழ்கின்றன. புறக் காரணங்கள், அகக் காரணங்கள் இந்த மாற்றத்திற்கு ஒரு தூண்டுகோலாக இருக்கலாம். | ||